மேட்டுப்பாளையம் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து : 10 -க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில், ஓடந்துறை என்னுமிடத்தில் தனியாருக்குச் சொந்தமான வாழை விவசாய தோட்டம் உள்ளது. அங்கு கூலி தொழிலாளர் குடும்பங்கள் 10 -க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். இந்த வீடுகளில் வசிப்போர் பகல் நேரங்களில் அருகிலுள்ள சாலையோரங்களில் தள்ளு வண்டியில் ஆடைகள் விற்பனை செய்து வருகின்றனர். 



இந்நிலையில், அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது வழக்கமான பணிகளுக்கு சென்றிருந்த சமயத்தில், ஒரு குடிசை வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மள மளவென அருகில் பரவி மற்ற குடிசைகளும் எரியத் தொடங்கின. அதன் பின்னர் அந்த வீடுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. 



இது குறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், அதற்குள் அனைத்துக் குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், வீடுகளில் இருந்த பணம், நகைகள் மற்றும் துணிகள் என அனைத்துப் பொருட்களும் கருகி நாசமானது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...