டெல்லி : விசைத்தறி நல மேம்பாட்டுக்காக முத்ரா கடன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார்.
டெல்லி : விசைத்தறி நல மேம்பாட்டுக்காக முத்ரா கடன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 1 லட்சம் தொழிலாளர்கள் தினசரி அடிப்படையில் வேலை பெற்று வருகின்றனர். வேளாண்மைக்கு அடுத்து விசைத்தறி துறை முக்கியமானதாகத் திகழ்கிறது. சுமார் 3 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் விசைத்தறி துறைக்கு வழங்கப்படும் கடன்களை இத்துறை பெற்று பயன்பெற்று வருகிறது. விசைத்தறி துறைக்கும் இந்த மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டம் தொடரப்படும் என்ற அறிவிப்பு நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது.
ஆனால், முத்ரா திட்டத்தின் கீழ், கடன் கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. உதாரணத்திற்கு, விசைத்தறி அமைப்பின் 65 உறுப்பினர்கள் முத்ரா திட்டக் கடன் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். நீண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடர் முயற்சிகளின் பலனாக இருவர் மட்டுமே கடன் பெற முடிந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குழுவுடன் நடந்த சந்திப்பின் போதும், இது பற்றிய புகார்கள் கூறப்பட்டன. அவர்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உறுதி கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் முத்ரா மூலமாகக் கடன் கோரி மனுக்களை அளித்தனர். ஆனால், இதுவரை வெறும் 12 பேர் மட்டுமே கடன் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் ஆணையத்திடமிருந்து, மானியத்துடன் முத்ரா கடன் வழங்க எவ்வித அறிக்கையும் வரவில்லை என மறுத்துள்ளனர். எனவே, விசைத்தறி துறையினரின் இந்த கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்து விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அமைச்சர் அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 1 லட்சம் தொழிலாளர்கள் தினசரி அடிப்படையில் வேலை பெற்று வருகின்றனர். வேளாண்மைக்கு அடுத்து விசைத்தறி துறை முக்கியமானதாகத் திகழ்கிறது. சுமார் 3 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் விசைத்தறி துறைக்கு வழங்கப்படும் கடன்களை இத்துறை பெற்று பயன்பெற்று வருகிறது. விசைத்தறி துறைக்கும் இந்த மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டம் தொடரப்படும் என்ற அறிவிப்பு நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது.
ஆனால், முத்ரா திட்டத்தின் கீழ், கடன் கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. உதாரணத்திற்கு, விசைத்தறி அமைப்பின் 65 உறுப்பினர்கள் முத்ரா திட்டக் கடன் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். நீண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடர் முயற்சிகளின் பலனாக இருவர் மட்டுமே கடன் பெற முடிந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குழுவுடன் நடந்த சந்திப்பின் போதும், இது பற்றிய புகார்கள் கூறப்பட்டன. அவர்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உறுதி கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் முத்ரா மூலமாகக் கடன் கோரி மனுக்களை அளித்தனர். ஆனால், இதுவரை வெறும் 12 பேர் மட்டுமே கடன் பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் ஆணையத்திடமிருந்து, மானியத்துடன் முத்ரா கடன் வழங்க எவ்வித அறிக்கையும் வரவில்லை என மறுத்துள்ளனர். எனவே, விசைத்தறி துறையினரின் இந்த கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்து விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அமைச்சர் அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் என்று கேட்டுக்கொள்கிறேன்.