கோவை: தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகம் முழுவதும் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜவேல் கூறியதாவது:- தொ.மு.ச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 27 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜவேல் கூறியதாவது:- தொ.மு.ச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 27 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.