நீலகிரி : இணையத்தில் நடைபெற்ற 2019 ஆண்டின் முதல் தேயிலை ஏலத்தில் ரூ.2 முதல் 3 வரை விலை உயர்ந்துள்ளதால் வர்த்தகர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி : இணையத்தில் நடைபெற்ற 2019 ஆண்டின் முதல் தேயிலை ஏலத்தில் ரூ.2 முதல் 3 வரை விலை உயர்ந்துள்ளதால் வர்த்தகர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமானது. இந்தத் தொழிலை ஏராளமான விவசாயிகள் நம்பியுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலம் வாரம்தோறும் நடைபெறும். ஒரு ஆண்டிற்கு சுமார் 52 வாரங்கள் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு ஏலம் எடுக்கின்றனர். இந்த வாரம் ஆண்டின் முதல் தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஏலத்தில் 17 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இவை சராசரியாக ரூ.2 முதல் ரூ.3 வரை விலை அதிகரித்துக் காணப்பட்டது. பனியின் தாக்கம் அதிகரிப்பால், தேயிலை மகசூல் குறைந்துள்ளது. எனவே, இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமானது. இந்தத் தொழிலை ஏராளமான விவசாயிகள் நம்பியுள்ளனர். இதையடுத்து, அனைத்துத் தேயிலை தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலம் வாரம்தோறும் நடைபெறும். ஒரு ஆண்டிற்கு சுமார் 52 வாரங்கள் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு ஏலம் எடுக்கின்றனர். இந்த வாரம் ஆண்டின் முதல் தேயிலை ஏலம் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஏலத்தில் 17 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இவை சராசரியாக ரூ.2 முதல் ரூ.3 வரை விலை அதிகரித்துக் காணப்பட்டது. பனியின் தாக்கம் அதிகரிப்பால், தேயிலை மகசூல் குறைந்துள்ளது. எனவே, இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.