கோவை : இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரத ஊர்வலம் நாளை நடைபெற உள்ளதால், கோவை மாநகரில் நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை : இஸ்கான் ஸ்ரீ ஜெகநாத் ரத ஊர்வலம் நாளை நடைபெற உள்ளதால், கோவை மாநகரில் நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதியில் செல்ல அனுமதியில்லை. சுங்கம் பைபாஸ் ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்தும் மற்றும் கங்கா கார்னரில் இருந்து பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பெரிய கடைவீதி, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடத்தை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். பேருந்துகள் வழக்கம் போல, டவுன்ஹால் வழியாக உக்கடம் அடையலாம். ஆனால், 1 மணி முதல் 6 மணி வரை டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதிக்கோ, ஒப்பணக்கார வீதிக்கோ செல்ல அனுமதியில்லை.
அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகியவற்றிற்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுக்கிரவார்பேட்டை வழியாக காந்திபார்க் அல்லது பூமார்க்கெட் வழியாக செல்ல வேண்டும்.
தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையாராஜபுரம், ராமமூர்த்தி சாலை வழியாக சிவாலயா திரையரங்கு அடைந்து புட்டுவிக்கி சாலை வழியாக பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைக்கு செல்ல வேண்டும்.
பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சிவாலயா சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் அடைந்தும் அல்லது சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர், பொன்னையாராஜபுரம், காந்திபார்க் அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
ஆர்.ஜி. வீதி மற்றும் வைசியால் வீதிக்கு காலை 08 மணி முதல் இரவு 8 மணி வரை லாரி போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மேலும், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியால் வீதி, கே.ஜி. வீதி, ஆர்.ஜி. வீதி, டி.கே. மார்க்கெட் ஆகிய சாலைகளில் காலை 10 மணி முதல் இரவு 08 மணி வரை எந்த வாகனமும் நிறுத்தக் கூடாது, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.