கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் (unskilled labour) பெறா ஊழியர்களுக்கான ஊதியம் ரூ. 5,200 மற்றும் ரூ 20,200 வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கான நிரந்தர ஊதியம் தொகுப்பிலிருந்து ஊதியம் வழங்கிட வேண்டும், சாலை பராமரிப்பு பணியினை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகியவை இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருச்சி சாலை அருகே நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அச்சங்கம் கோவை கோட்டத் தலைவர் முருகேசன் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள நெடுஞ்சாலை துறையில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை முதலமைச்சர் கண்டுகொள்வதில்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தண்டோரா போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் (unskilled labour) பெறா ஊழியர்களுக்கான ஊதியம் ரூ. 5,200 மற்றும் ரூ 20,200 வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கான நிரந்தர ஊதியம் தொகுப்பிலிருந்து ஊதியம் வழங்கிட வேண்டும், சாலை பராமரிப்பு பணியினை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகியவை இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருச்சி சாலை அருகே நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அச்சங்கம் கோவை கோட்டத் தலைவர் முருகேசன் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள நெடுஞ்சாலை துறையில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை முதலமைச்சர் கண்டுகொள்வதில்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தண்டோரா போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.