பழனி மலைக்கோவிலில் பிடிபட்ட 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு

திண்டுக்கல் : பழனி மலைக்கோயிலில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் : பழனி மலைக்கோயிலில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் முருகன் கோவிலில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், மலைக்கோவிலுக்கு சரக்குகள் ஏற்றிச்செல்லும் மெட்டீரியல் ரோப்கார் நிலையத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 



இதனையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணிநேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 15 அடி நீளமும், 150 கிலோ எடையும் இருந்தது. பின்னர், பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, கொடைக்கானல் வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் கொண்டு சென்று விட்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...