நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
உதகை நகராட்சி நிர்வாகம் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய விடுமுறை சரண்டர் பயனை உடனடியாக வழங்கிட வேண்டும். 2014 -ல் வழங்கப்பட வேண்டிய ஸ்பெசல் கிரேடு, செலக்சன் கிரேடு மற்றும் சூப்பர் கிரேடுகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.

மேலும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகையினை நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தாததால் பி.எப்., கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பணி ஓய்வு பெறும் போது வருங்கால வைப்பு நிதி சரியாக கிடைப்பதில்லை. நிரந்தர பணியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
குறிப்பாக, ஒப்பந்த ஊழியர்களுக்குக் கையுறை, காலணி மற்றும் சீருடை உட்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பணியின் போது ஏற்படும் விபத்தில் காயமடையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உட்பட அனைத்துச் செலவினங்களையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு சங்கத்தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் கமலகண்ணன் கூறும் போது போராட்டம் நடத்துவதற்கு எவ்விதமான அனுமதியும் இல்லை. எனவே, 10 பேர் மட்டும் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கலாம்.
இதனை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் எனத் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர். இதனை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உதகை நகராட்சி நிர்வாகம் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய விடுமுறை சரண்டர் பயனை உடனடியாக வழங்கிட வேண்டும். 2014 -ல் வழங்கப்பட வேண்டிய ஸ்பெசல் கிரேடு, செலக்சன் கிரேடு மற்றும் சூப்பர் கிரேடுகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.

மேலும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகையினை நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தாததால் பி.எப்., கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பணி ஓய்வு பெறும் போது வருங்கால வைப்பு நிதி சரியாக கிடைப்பதில்லை. நிரந்தர பணியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
குறிப்பாக, ஒப்பந்த ஊழியர்களுக்குக் கையுறை, காலணி மற்றும் சீருடை உட்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பணியின் போது ஏற்படும் விபத்தில் காயமடையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உட்பட அனைத்துச் செலவினங்களையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு சங்கத்தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் கமலகண்ணன் கூறும் போது போராட்டம் நடத்துவதற்கு எவ்விதமான அனுமதியும் இல்லை. எனவே, 10 பேர் மட்டும் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கலாம்.
இதனை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் எனத் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர். இதனை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.