பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டவிருக்கும் உதகை

நீலகிரி : உதகையில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக விரைவில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸை எட்ட வாய்ப்புள்ளது.

நீலகிரி : உதகையில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக விரைவில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸை எட்ட வாய்ப்புள்ளது. 

நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரண்டு வாரங்களாக உறைபனி பொழிவு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு உறைபனியின் தாக்கம் அதிகமாகத் தென்பட்டது. மேலும், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. இதே போலவே, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. உறைபனி தொடர்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதே போலவே, தொடர்ந்து உறைபனி பொழிய நேர்ந்தால் விரைவில் கொடைக்கானலைப் போல உதகையும் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்ட வாய்ப்புள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...