நீலகிரி : உதகையில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக விரைவில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸை எட்ட வாய்ப்புள்ளது.
நீலகிரி : உதகையில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக விரைவில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸை எட்ட வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரண்டு வாரங்களாக உறைபனி பொழிவு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு உறைபனியின் தாக்கம் அதிகமாகத் தென்பட்டது. மேலும், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. இதே போலவே, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. உறைபனி தொடர்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போலவே, தொடர்ந்து உறைபனி பொழிய நேர்ந்தால் விரைவில் கொடைக்கானலைப் போல உதகையும் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்ட வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரண்டு வாரங்களாக உறைபனி பொழிவு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு உறைபனியின் தாக்கம் அதிகமாகத் தென்பட்டது. மேலும், நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தது. இதே போலவே, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. உறைபனி தொடர்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போலவே, தொடர்ந்து உறைபனி பொழிய நேர்ந்தால் விரைவில் கொடைக்கானலைப் போல உதகையும் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்ட வாய்ப்புள்ளது.