உறைபனிப் பொழிவால் மினி காஷ்மீராகத் தோற்றமளிக்கும் கொடைக்கானல் !

திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக நேற்றிரவு முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.


திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக நேற்றிரவு முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. 

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த வருடம் டிசம்பர் 15 -ம் தேதி முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாகவே உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. 

இதனால், நேற்றிரவு முதல் 0 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. எனவே, கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியப் பகுதிகளில் உறை பனி காணப்பட்டது. மேலும், கொடைக்கானல் ஏரி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்ணிற ஆடை போர்த்தியது போல பனித்துகள்கள் காட்சியளிக்கின்றன. 

உறைபனிப் பொழிவால் மினி காஷ்மீர் போலத் தோற்றமளிக்கும் கொடைக்கானலைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கடும் பனிப்பொழிவால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. 

மேலும், மேல்மலை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பூண்டு உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கொடைக்கானல் வானியல் மைய விஞ்ஞானி கூறும் போது கொடைக்கானலில் நிலவி வரும் உறைபனி சீசனானது பிப்ரவரி 15 -ம் தேதி வரை நீடிக்கும் என கூறியுள்ளார். சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற நிலை காணப்படுவதாக கொடைக்கானல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...