சபரிமலை விவகாரம் : கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

கோவை : கேரளாவில் பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை : கேரளாவில் பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை மீறி அங்கு சென்றவர்களை தடுக்கும் முயற்சியில் போராட்டகாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



வெகுகாலமாக கடைபிடிக்கும் பாரம்பரித்தை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்து, பெண்கள் சபரிமலை கோவிலுக்கு வருவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து மற்றும் மலபுரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் வழிபாடு செய்தனர். இந்த தகவல் வெளிவந்ததையடுத்து, நேற்று கோவில் நடை சாத்தப்பட்டு சுத்திகலசம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் தான் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. 

இதையடுத்து, கோவிலின் பாரம்பரியம் கெட காரணமாக இருப்பது கேரளாவில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி தான் எனவும், அதனைக் கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இன்று கேரளாவில் முழு அடைப்பிற்கு பல்வேறு கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனால், கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும், கோவை ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள ரயில் மீது ஏறியும் போராட்டத்தை தொடர்ந்தனர். 



இதனிடையே, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோலவே, பா.ஜ.க வை சேர்ந்த வழக்கறிஞர்கள் கேரள அரசைக் கண்டித்து நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...