நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று போராட்டம் : எம்.பி., சத்யபாமா தகவல்

டெல்லி : மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க., எம்.பி.,க்கள் 24 பேரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக திருப்பூர் எம்.பி.சத்யபாமா தெரிவித்துள்ளார்.

டெல்லி : மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க., எம்.பி.,க்கள் 24 பேரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக திருப்பூர் எம்.பி.சத்யபாமா தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளியில் அதிமுக எம்.பி.க்கள் காதிகங்களை வீசி எறிந்து எதிர்ப்பைக் காட்டினர்.



இதையடுத்து அ.தி.மு.க எம்.பி.க்கள் அன்வர் ராஜா, சத்யபாமா, பி.ஆர்.சுந்தரம், வனரோஜா, ஜெயவர்த்தன் உள்ளிட்ட 24 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். 

மேலும், மாநிலங்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பான விவாதத்தை நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்டதால் அதிமுக மற்றும் திமுக எம்.பி,.க்கள் அனைவரும் இன்று ஒரு நாள் மட்டும் அவையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் எம்.பி சத்யபாமா சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகையில், "நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். தற்போது எம்.பி.க்கள் நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டுள்ளோம். அங்குள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். அடுத்தகட்ட முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்." என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...