டெல்லி: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தமிழக எம்.பி.,க்களின் கேள்விக்கு மத்திய அமைச்சரவை பதிலளித்துள்ளது.
டெல்லி: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தமிழக எம்.பி.,க்களின் கேள்விக்கு மத்திய அமைச்சரவை பதிலளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர், இம்மாதம் ஜனவரி 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் தமிழக சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாய் வசூலான தொகை என்ன? என்பது குறித்த கேள்வியை அதிமுக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி பாரதி மோகன், திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, திருப்பூர் எம்.பி சத்யபாமா ஆகியோர் கூட்டாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதிமுக எம்.பி,.க்களின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மான்வியா பதிலளித்தார்.
அவர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் ரூ.9,842 கோடியே 30 லட்சம் வசூலாகியுள்ளது." என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர், இம்மாதம் ஜனவரி 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் தமிழக சுங்கச்சாவடிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாய் வசூலான தொகை என்ன? என்பது குறித்த கேள்வியை அதிமுக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி பாரதி மோகன், திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, திருப்பூர் எம்.பி சத்யபாமா ஆகியோர் கூட்டாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதிமுக எம்.பி,.க்களின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மான்வியா பதிலளித்தார்.
அவர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் ரூ.9,842 கோடியே 30 லட்சம் வசூலாகியுள்ளது." என்று தெரிவித்தார்.