நீலகிரி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உதகையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உதகையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி சட்டமன்ற தொகுதியும், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியும் உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியாகும்.

நீலகிரி தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டமன்ற தொகுதியில் 1413 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் எண்ணப்படவுள்ளது. இதற்காக, உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள், எஸ்.பி., சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையங்கள் (அறைகள்), வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு வசதிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி சட்டமன்ற தொகுதியும், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியும் உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியாகும்.

நீலகிரி தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டமன்ற தொகுதியில் 1413 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் எண்ணப்படவுள்ளது. இதற்காக, உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, 6 சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்கள், எஸ்.பி., சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையங்கள் (அறைகள்), வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு வசதிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.