கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் புகார் அளித்தார்.
கோவை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் புகார் அளித்தார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர், கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு கலைவாணி இஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது கோவைபுதூரை சேர்ந்த ஹரிநாராயணன் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிநாராயணன் தனது தந்தை ராதாகிருஷ்ணனுக்கு அரசியலில் மேலிடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

பொதுப்பணித் துறையில் அரசுப் பணி பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 4 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். பணத்தை கொடுத்தவுடன் உடனடியாக வேலை கிடைக்குமென மாணவனின் தந்தை ராதாகிருஷ்ணன் கூறியதையடுத்து, ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து 3 ஆண்டுகளாகியும் பணியையோ அல்லது பணத்தையோ கொடுக்காமல் காலதாமதப்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியர் பிரகாஷ், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவர், கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு கலைவாணி இஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது கோவைபுதூரை சேர்ந்த ஹரிநாராயணன் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிநாராயணன் தனது தந்தை ராதாகிருஷ்ணனுக்கு அரசியலில் மேலிடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

பொதுப்பணித் துறையில் அரசுப் பணி பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ. 4 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். பணத்தை கொடுத்தவுடன் உடனடியாக வேலை கிடைக்குமென மாணவனின் தந்தை ராதாகிருஷ்ணன் கூறியதையடுத்து, ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து 3 ஆண்டுகளாகியும் பணியையோ அல்லது பணத்தையோ கொடுக்காமல் காலதாமதப்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியர் பிரகாஷ், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.