திருப்பூர் : நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை கணினியில் பதிவு செய்யும் ஒருங்கிணைந்த கணினி மையத்தை மாவட்ட நீதிபதி அல்லி திறந்து வைத்தார்.
திருப்பூர் : நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளை கணினியில் பதிவு செய்யும் ஒருங்கிணைந்த கணினி மையத்தை மாவட்ட நீதிபதி அல்லி திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்யவும், புகார் அளிக்கவும், மேலும் மனுக்களின் வாய்தா தேதி உள்ளிட்ட தகவல்களை பெற நீதிமன்றங்களை அணுக வேண்டியிருந்தது. இந்த நிலையில், அவற்றின் நடைமுறைகளை எளிதாக்க ஒருங்கிணைந்த கணினி சேவை மையத்தை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி தொடங்கி வைத்தார்.
அப்போது, நீதிமன்றத்தின் பணிகள் எளிதாக்கப்படும் என்றும், ஒரே மையத்தில் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளப்படும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்யவும், புகார் அளிக்கவும், மேலும் மனுக்களின் வாய்தா தேதி உள்ளிட்ட தகவல்களை பெற நீதிமன்றங்களை அணுக வேண்டியிருந்தது. இந்த நிலையில், அவற்றின் நடைமுறைகளை எளிதாக்க ஒருங்கிணைந்த கணினி சேவை மையத்தை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி தொடங்கி வைத்தார்.
அப்போது, நீதிமன்றத்தின் பணிகள் எளிதாக்கப்படும் என்றும், ஒரே மையத்தில் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளப்படும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.