பன்னாட்டு வியாபாரப் பொருட்களுக்குத் தீ வைத்து திருப்பூர் வணிகர்கள் ஆர்பாட்டம்

திருப்பூர் : பிளாஸ்டிக் தடை ஒருதலைபட்சமானது எனக் கூறி பிஸ்கட், குளிர்பானம், சோப், பேஸ்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை தீ வைத்து எரித்து மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : பிளாஸ்டிக் தடை ஒருதலைபட்சமானது எனக் கூறி பிஸ்கட், குளிர்பானம், சோப், பேஸ்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை தீ வைத்து எரித்து மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் குமரன் சிலை அருகே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய ஆதிக்கத்தையும், ஆட்சியாளர்களின் சூழ்ச்சியையும் முறியடிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெற்றது. இதில் வணிகர்கள் ஒன்றிணைந்து குளிர்பானம், பிங்கோ, பேஸ்ட், சோப், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை சாலையில் கொட்டி தீ வைத்து எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தலைவர் த.வெள்ளையன் பேசுகையில், "மறு சுழற்சி செய்ய முடியாத பன்னாட்டு நிறுவனங்களின் பேக்கிங் கவிர்களை தடை செய்யவில்லை. ஆனால், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஒருதலை பட்சமானது. 

இதனால் சில்லறை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைப் புறக்கணிக்க உள்ளோம். அதற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...