கோவை : எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் அமைந்துள்ள நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் கருகி நாசம் அடைந்துள்ளது.
கோவை : எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் அமைந்துள்ள நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் கருகி நாசம் அடைந்துள்ளது.
கோவை மாவட்டம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை வளாகத்தின் ஒரு பகுதியில் நூல் உற்பத்திக்காகப் பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் இந்தப் பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாகப் பரவியதால் அணைக்க முடியவில்லை. ஆகையால், தீ விபத்து குறித்து கோவை பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையிலான பீளமேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர், பஞ்சு பேல்கள், மூட்டைகளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின், பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இவ்விபத்தால், அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 20 பஞ்சு மூட்டைகள், 70 -க்கும் மேற்பட்ட பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த விபத்துக் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை வளாகத்தின் ஒரு பகுதியில் நூல் உற்பத்திக்காகப் பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் இந்தப் பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ வேகமாகப் பரவியதால் அணைக்க முடியவில்லை. ஆகையால், தீ விபத்து குறித்து கோவை பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் முத்துகுமாரசாமி தலைமையிலான பீளமேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர், பஞ்சு பேல்கள், மூட்டைகளில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின், பஞ்சு பேல்கள் மற்றும் மூட்டைகளில் பிடித்த தீ அணைக்கப்பட்டது.
திடீரென ஏற்பட்ட இவ்விபத்தால், அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 20 பஞ்சு மூட்டைகள், 70 -க்கும் மேற்பட்ட பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த விபத்துக் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.