கோவை : கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் நடக்கும் 'ஈட் ஸ்ட்ரீட்' என்ற மெகா உணவு திருவிழா வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.
கோவை : கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் நடக்கும் 'ஈட் ஸ்ட்ரீட்' என்ற மெகா உணவு திருவிழா வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.
கோவை திருவிழாவின் ஒரு பகுதியாக, முதன்முறையாக கோவை கொடிசியா சாலையில் உள்ள திறந்த வெளியில் ஒரு மாபெரும் உணவு திருவிழாவிற்கு கோவை ஓட்டல்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 'ஈட் ஸ்ட்ரீட்' (EAT STREET) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த மாபெரும் உணவு திருவிழா, வரும் ஜனவரி 4 முதல் ஜனவரி 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை விதவிதமான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.
கோவையில் வெற்றிகரமான மாபெரும் உணவு தயாரிப்பாளர்கள், அறுசுவை உணவு தருவோர், அணிதிரண்டு ஒரே இடத்தில் கூடி மக்களுக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை தரும் திருவிழாவை அளிக்கின்றனர். கோவை மண்ணுக்கே உரித்தான மணமிக்க சுவை மட்டுமின்றி, சுவையோடு இசையையும் செவிக்கு வழங்குகின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரிய கலைகள் சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை மற்றும் பரை, தப்பாட்டம் போன்றவை இடம் பெறுகின்றன.
இந்த உணவுத் திருவிழாவிற்கு நுழைவு கட்டணமாக ரூ. 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதோடு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சாம்பார் இட்லி, மட்டன் சுக்கா மற்றும் பிசாவிலிருந்து பிரியாணி வரை, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்றவையையும் சுவைக்கலாம்.
இவை தவிர, கிளி ஜோசியம், பெட்டிக்கடை போன்றவையும் இடம் பெறுகின்றன. இந்த தெருவில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம். 100-க்கும் அதிகமான உணவகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 7 அப் வழங்கும் தங்கமலை அதிர்ஷ்ட குலுக்கலை நடத்துகிறது. இதில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தங்க நாணயம் பரிசு கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு, கோவை மாவட்ட ஓட்டல் சங்க செயலாளர் சிவக்குமாரை 9443266764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை திருவிழாவின் ஒரு பகுதியாக, முதன்முறையாக கோவை கொடிசியா சாலையில் உள்ள திறந்த வெளியில் ஒரு மாபெரும் உணவு திருவிழாவிற்கு கோவை ஓட்டல்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 'ஈட் ஸ்ட்ரீட்' (EAT STREET) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த மாபெரும் உணவு திருவிழா, வரும் ஜனவரி 4 முதல் ஜனவரி 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை விதவிதமான உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.
கோவையில் வெற்றிகரமான மாபெரும் உணவு தயாரிப்பாளர்கள், அறுசுவை உணவு தருவோர், அணிதிரண்டு ஒரே இடத்தில் கூடி மக்களுக்கு ஒரு மாபெரும் அனுபவத்தை தரும் திருவிழாவை அளிக்கின்றனர். கோவை மண்ணுக்கே உரித்தான மணமிக்க சுவை மட்டுமின்றி, சுவையோடு இசையையும் செவிக்கு வழங்குகின்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரிய கலைகள் சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை மற்றும் பரை, தப்பாட்டம் போன்றவை இடம் பெறுகின்றன.
இந்த உணவுத் திருவிழாவிற்கு நுழைவு கட்டணமாக ரூ. 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதோடு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சாம்பார் இட்லி, மட்டன் சுக்கா மற்றும் பிசாவிலிருந்து பிரியாணி வரை, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்றவையையும் சுவைக்கலாம்.
இவை தவிர, கிளி ஜோசியம், பெட்டிக்கடை போன்றவையும் இடம் பெறுகின்றன. இந்த தெருவில் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம். 100-க்கும் அதிகமான உணவகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 7 அப் வழங்கும் தங்கமலை அதிர்ஷ்ட குலுக்கலை நடத்துகிறது. இதில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தங்க நாணயம் பரிசு கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு, கோவை மாவட்ட ஓட்டல் சங்க செயலாளர் சிவக்குமாரை 9443266764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.