பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் களைகட்டிய வண்ண கோலப்பொடி விற்பனை

திருப்பூர் : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் வண்ணக் கோலப் பொடி விற்பனை களைகட்டியுள்ளது.


திருப்பூர் : தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் வண்ணக் கோலப் பொடி விற்பனை களைகட்டியுள்ளது. 

தமிழர்களின் முன்னணி பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை, கிராமப்புறங்கள் மட்டுமல்லாது, நகர் புறங்களிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது, அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் புதுவிதமான கோலமிட்டு மகிழ்வர். பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் வண்ணக் கோலங்கள் மற்றும் அழகான கோலங்கள் தங்கள் வீடுகளில் போடப்பட்டதாக பெருமை பேசும் வழக்கமும் இருந்து வருகிறது.



சமூக வலைதளங்களில் இந்த காலத்து இளைஞர்கள் மூழ்கி விட்டதால், பாரம்பரிய வழக்கங்கள் மறைந்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டியும், மார்கழி மாதத்தை முன்னிட்டும் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வண்ண கோலப் பொடி விற்பனை கடைகளில் குவியும் கூட்டம் பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது. 



திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக முளைத்துள்ள வண்ணப் பொடிகள், கோலமாவு விற்பனையானது சூடு பிடித்துள்ளது. வண்ணப் பொடிகளும் ரூ. 5 முதல் கிடைப்பதால் பெரும்பாலானோர் வாங்கி செல்கின்றனர். ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படும் வண்ணப் பொடிகள் மார்கழி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என 35 நாட்கள் மட்டுமே விற்பனை என்ற நிலையிலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்திருப்பது வண்ண பொடிகள் தயாரிப்பாளர்கள், விற்பனையார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...