எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை : எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

கோவை : எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது. 

கோவை மாநகராட்சி, எஸ்.ஐ.எச்.எஸ். காலனியிலிருந்து ஒண்டிப்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி மேற்கொள்ள கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி டென்டர் கோரப்பட்டு, ரூ. 21.16 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 80 சதவிகித பணிகள் முடிவுற்ற சூழ்நிலையில், சேவை சாலை அமைப்பதற்காக நில எடுப்பு பணிக்கு, உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கினர். 

இதனிடையே, அப்பகுதியில் உள்ள நில உரிமைதாரர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி நீதிமன்ற இடைக்காலத் தடை பெற்றனர். இவ்வழக்கு தொடர்பாக பலமுறை உயர்நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டும், நீதிமன்ற இடைக்கால தடை இதுவரை நீக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, இச்சூழ்நிலையில், சுமார் ஏழு ஆண்டுகளாக நிலுவையிலுள்ள இப்பாலப்பணிகளை முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் உயரிய நோக்கத்தில், நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய நில உரிமையாளர்களையும், நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை அலுவலர்களுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார். 

நிலஉரிமையாளர்கள் உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்ததன் அடிப்டையில், இவ்வழக்கின் அடுத்த விசாரணையின்போது, நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு நீதிமன்ற இடைக்கால தடை ஆணை நீக்கம் செய்யப்படும் பட்சத்தில், நீண்ட கால கோரிக்கையாக நிலுவையில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...