நீலகிரி : உதகை அருகே முத்துநாடு மந்துவில் தோடர் இன மக்களின் சார்பில் 'மொற்பர்த்' என்ற பெயரில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி : உதகை அருகே முத்துநாடு மந்துவில் தோடர் இன மக்களின் சார்பில் 'மொற்பர்த்' என்ற பெயரில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர் மற்றும் குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மாறாமல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவுமுறை, வழிபாட்டுமுறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.

தோடர் இன மக்களின் தலைமைமந்தாக (தலைமையிடம்) கருதப்படும், உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்துவில், புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுக்க உள்ள தோடர் மந்துகளில் வசிக்கும், தோடர் இனமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னதாக, தோடர் இன மக்களின் குலதெய்வ கோவிலில் உள்ள, 'மூன்பவ், அயன்ஓவ்' தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர்.
பின், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். தங்களின் பாரம்பரிய உடையணிந்து, ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான இந்தப் பழங்குடியின மக்களின் 'மொற்பத்' என்ற புத்தாண்டு பண்டிகையை பலரும் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், காட்டுநாயக்கர், பனியர், இருளர் மற்றும் குறும்பர் இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மாறாமல் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உடை, உணவுமுறை, வழிபாட்டுமுறை, திருமணம், இறப்பு என தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.

தோடர் இன மக்களின் தலைமைமந்தாக (தலைமையிடம்) கருதப்படும், உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்துவில், புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுக்க உள்ள தோடர் மந்துகளில் வசிக்கும், தோடர் இனமக்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். முன்னதாக, தோடர் இன மக்களின் குலதெய்வ கோவிலில் உள்ள, 'மூன்பவ், அயன்ஓவ்' தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர்.
பின், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். தங்களின் பாரம்பரிய உடையணிந்து, ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தின் பூர்வகுடிகளான இந்தப் பழங்குடியின மக்களின் 'மொற்பத்' என்ற புத்தாண்டு பண்டிகையை பலரும் கண்டு ரசித்தனர்.