கோவை: கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குமாறு மத்திய விமானப் போக்குசரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் திருப்பூர் எம்.பி சத்தியபாமா கோரிக்கை விடுத்தார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு மற்றும் சரக்கு பெட்டக முனையம் உருவாக்குமாறு மத்திய விமானப் போக்குசரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் திருப்பூர் எம்.பி சத்தியபாமா கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு இல்லாமல் இருப்பது பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெரும் எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் சென்னை நகரத்திற்கோ அல்லது பெங்களூரு நகரத்திற்கோ செல்ல நேரிடுகிறது. அதே போல, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளும் திருப்பூருக்கு வர விமான சேவைகள் இன்றி அவதியுறுகின்றனர். ஏற்றுமதிகள் மற்றும் இந்தப் பகுதிக்கு சர்வதேச பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது பற்றி கருத்தில் கொண்டு கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் வழங்கும் வசதிகளை நிறுவவேண்டியது காலத்தின் அவசியமாகும்.
கோவையில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைவது உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிதும் உதவியாக அமையும். எனவே, கோவை விமான நிலையத்தில் சர்வதேச சரக்குப் பெட்டகம் அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பின்னலாடைத் துறை சந்தித்து வரும் பிரச்சனைகளை கவனிக்கவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும். குறிப்பாக, பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கவும் இந்த நடவடிக்கைகள் உதவும்.
எனவே கோவை விமான நிலையத்தில் சர்வதேச நகரங்களுடனான விமான சேவைத் தொடர்புகளை மேம்படுத்தவும், சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் ஒன்றை அமைக்கவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உதவிட வேண்டும், இவ்வாறு திருப்பூர் எம்.பி சத்தியபாமா அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- கோவை சர்வதேச விமான சேவைகளின் தொடர்பு இல்லாமல் இருப்பது பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெரும் எண்ணிக்கையிலான ஏற்றுமதியாளர்கள் சென்னை நகரத்திற்கோ அல்லது பெங்களூரு நகரத்திற்கோ செல்ல நேரிடுகிறது. அதே போல, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த வியாபாரிகளும் திருப்பூருக்கு வர விமான சேவைகள் இன்றி அவதியுறுகின்றனர். ஏற்றுமதிகள் மற்றும் இந்தப் பகுதிக்கு சர்வதேச பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது பற்றி கருத்தில் கொண்டு கோவை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் வழங்கும் வசதிகளை நிறுவவேண்டியது காலத்தின் அவசியமாகும்.
கோவையில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைவது உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரிதும் உதவியாக அமையும். எனவே, கோவை விமான நிலையத்தில் சர்வதேச சரக்குப் பெட்டகம் அமைய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பின்னலாடைத் துறை சந்தித்து வரும் பிரச்சனைகளை கவனிக்கவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும். குறிப்பாக, பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்கவும் இந்த நடவடிக்கைகள் உதவும்.
எனவே கோவை விமான நிலையத்தில் சர்வதேச நகரங்களுடனான விமான சேவைத் தொடர்புகளை மேம்படுத்தவும், சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் ஒன்றை அமைக்கவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உதவிட வேண்டும், இவ்வாறு திருப்பூர் எம்.பி சத்தியபாமா அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.