உதகையில் நாளை மட்டும் மது போதையுடன் வருபவர்கள் மீது வழக்குப் பதியாமல் நடவடிக்கை எடுக்க முடிவு

நீலகிரி : உதகையில் புத்தாண்டை முன்னிட்டு மது போதையில் வருபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விழிப்புணர்வு குறும்படம் போட்டி காண்பிக்க உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உதகையில் புத்தாண்டை முன்னிட்டு மது போதையில் வருபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விழிப்புணர்வு குறும்படம் போட்டி காண்பிக்க உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா தெரிவித்துள்ளார். 

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக அளவில் சுற்றுலா ஸ்தலங்களில் புகழ்பெற்ற மாவட்டம் ஆகும். அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்கும் வகையில், குடிபோதையில் வாகன ஓட்டி வரும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக முக்கிய சாலைகளில் 17 மையங்கள் அமைக்கப்பட்டு விபத்து குறித்து குறும்படம் காட்டப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- கடந்த ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் 27 லட்சம் சுற்றுலாப்பயணிகள் நீலகிரிக்கு வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக தேனிலவு தம்பதியர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் என பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

இதையடுத்து, நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகள் குடிபோதையில் வந்தால் அவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நாளை ஒரு நாள் மட்டும் குடிபோதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் காட்டப்படவுள்ளது. 

இதற்காக , உதகை, குன்னூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட 17 இடங்களில் குடிபோதையால் ஏற்படும் பாதிப்பு குறித்து குறும்படம் காண்பிக்கப்படவுள்ளது. மேலும், இது அவர்கள் பயணம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமையும். அத்துடன் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 500 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...