நீலகிரி : உதகை, காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு நுண் உரம் செயலாக்க மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.
நீலகிரி : உதகை, காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு நுண் உரம் செயலாக்க மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உதகை நகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒருபகுதியாக அன்றாட சேகரிக்கும் கழிவுகளை நுண் உரமாக மாற்றும் செயலாக்க மையங்கள், 6 இடங்களில் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதில் முதலாவதாக உதகை காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 நுண் உரம் செயலாக்க மையங்கள் இன்று தொடங்கப்பட்டது.

நீலகிரி இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மையங்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் மூலம் 4 டன் உரம் தினசரி உற்பத்தி செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, விற்பனையாளர்களிடம் வெற்றிகரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறும் போது, தமிழகத்தில் 1 -ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு நீலகிரி மாவட்டம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிழ்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜூணன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேசன்,உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உதகை நகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒருபகுதியாக அன்றாட சேகரிக்கும் கழிவுகளை நுண் உரமாக மாற்றும் செயலாக்க மையங்கள், 6 இடங்களில் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. இதில் முதலாவதாக உதகை காந்தல் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 நுண் உரம் செயலாக்க மையங்கள் இன்று தொடங்கப்பட்டது.

நீலகிரி இயற்கை வேளாண் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த மையங்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் மூலம் 4 டன் உரம் தினசரி உற்பத்தி செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு, விற்பனையாளர்களிடம் வெற்றிகரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறும் போது, தமிழகத்தில் 1 -ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை செய்யப்படவுள்ள நிலையில், அதற்கு நீலகிரி மாவட்டம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிழ்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜூணன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, உதகை சட்டப்பேரவை உறுப்பினர் கணேசன்,உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
