கோவை : விளைநிலங்கள் மீது உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன்பு இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : விளைநிலங்கள் மீது உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன்பு இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு, மின்வாரியம் சார்பில் உயர்மின் அழுத்த கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது. இதனைக் கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய தொழிற்சங்க மையத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விவசாயிகளை வஞ்சிக்காதே, விளை நிலங்களை பாலைவனம் ஆக்காதே, மாற்று வழிதடத்தில் உயர்மின் கோபுரங்களை அமைத்திடு, விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "தமிழக அரசு விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைவதை கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக கேரள மாநிலத்தை போல் பூமிக்கு அடியில் அமைக்க முயற்சிக்க வேண்டும்.
மேலும், சுல்தான்பேட்டை முதல் சேலம் வரை உள்ள ஏழு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், மாற்றம் ஒன்றே ஒரே வழி என்பதை வலியுறுத்தி வரும் 8,9 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்," என்றார். இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு, மின்வாரியம் சார்பில் உயர்மின் அழுத்த கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளது. இதனைக் கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய தொழிற்சங்க மையத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விவசாயிகளை வஞ்சிக்காதே, விளை நிலங்களை பாலைவனம் ஆக்காதே, மாற்று வழிதடத்தில் உயர்மின் கோபுரங்களை அமைத்திடு, விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதன் பின்னர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "தமிழக அரசு விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைவதை கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக கேரள மாநிலத்தை போல் பூமிக்கு அடியில் அமைக்க முயற்சிக்க வேண்டும்.
மேலும், சுல்தான்பேட்டை முதல் சேலம் வரை உள்ள ஏழு மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், மாற்றம் ஒன்றே ஒரே வழி என்பதை வலியுறுத்தி வரும் 8,9 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்," என்றார். இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.