அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் செலுத்தக் கெடுபிடி : கண்களில் கருப்பு துணி கட்டிப் பயனாளிகள் போராட்டம்

திருப்பூர் : அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உடனடியாக பணம் செலுத்தக் கோரி கெடுபிடி செய்வதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி, பட்டை நாமத்துடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய உடனடியாக பணம் செலுத்தக் கோரி கெடுபிடி செய்வதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து கண்களில் கருப்பு துணி கட்டி, பட்டை நாமத்துடன் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 -வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது மேட்டுவளவு பகுதி. இங்கு கடந்த 100 வருடங்களாக 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளக் காரணத்தால், அப்பகுதியில் குடி இருந்தவர்களுக்கு மாற்று இடத்துடன் கூடிய வீடு இலவசமாக ஒதுக்கித் தருவதாக கூறி குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 

இதனையடுத்து, திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அனைவருக்கும் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கான ஒதுக்கீடு ரசீதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வீடு ஒதுக்கீடு பெற்ற அனைவரும் தலா ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கட்டணமாக செலுத்த நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூலி வேலை செய்துவரும் தங்களால் பெரிய தொகையைச் செலுத்த இயலாது எனக் கூறி அதிகாரிகள் மீது புகார் கூறினர். 

மேலும், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கண்களில் கருப்பு துணியை கட்டியும், பட்டை நாமம் இட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...