விபத்தில்லா புத்தாண்டை உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வரும் கோவை போலீசார்

கோவை : ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விபத்தில்லா புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


கோவை : ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விபத்தில்லா புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடிக் களிக்க பொதுமக்கள் அதிவேகமாக மற்றும் மதுபோதையில் வாகனத்தை இயக்குவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற அலட்சியங்களால் விபத்தைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் உத்தரவின் பேரில் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் ஐபிஎஸ் தலைமையில் போலீசார் குழு செயல்பட்டு வருகிறது. 



இந்த காவல்துறை குழு, விபத்துகளைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வுகளைச் செய்து வருகின்றனர். அதே போலவே, ஊடகங்கள் மற்றும் விளம்பர பேனர்கள் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, விழிப்புணர்வின் ஒரு பகுதியாக உதவி ஆணையாளர் ராஜ் கண்ணா தலைமையில், ஆய்வாளர்கள் சதாசிவம், சண்முகம் மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட 5 ஆயிரம் நோட்டீஸ்கள் அச்சடித்துள்ளனர். இதைக் கோவை மாநகர சாலையில் செல்லும் ஓட்டுநர்களுக்குக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...