கீரணத்தம் அருகே வீடுபுகுந்து திருடிய 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவை : கீரணத்தம் அருகே வீடுபுகுந்து திருட முயற்சி செய்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை : கீரணத்தம் அருகே வீடுபுகுந்து திருட முயற்சி செய்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 



சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் அருகே உள்ளது சிவசக்தி கார்டன். இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில், பொருட்களை விற்பனை செய்வது போலவும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து தருவதாகக் கூறி சில மர்ம நபர்கள் ரோந்து வந்து சென்றுள்ளனர். இதையடுத்து, கடந்த 3 தினங்களாக பூட்டியே கிடந்த வீட்டை குறித்து இன்று மதியம் 12 மணியளவில் இரண்டு பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர். 

அப்போது, வீட்டின் உரிமையாளர்கள் வந்துவிட்டதால், இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில் ஒருவரை அங்கு திரண்ட பொதுமக்கள் பிடித்தனர். பின்னர், அந்த நபரின் மூலம் மற்றொரு நபரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, இருவரையும் கயிறு மூலம் கட்டி வைத்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில், அடகு கடைகளில் நகைகளை அடகு வைத்தற்கான பல இரசீதுகளை வைத்திருந்தது. இதன்மூலம், வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடி, அவற்றை அடகு வைப்பதையே இவர்கள் தொழிலாளாகக் கொண்டிருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து, கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரையும் ஒப்படைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...