தடாகம் அருகே வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை அரிவாளால் துரத்திய வீரமங்கை

கோவை : தடாகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை பெண்ணொருவர் தைரியமாக அரிவாளுடன் துரத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை : தடாகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை பெண்ணொருவர் தைரியமாக அரிவாளுடன் துரத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



தடாகம் அருகேயுள்ள பன்னிமடை ஸ்ரீவாரி கார்டனை சேர்ந்தவர் சீனிவாசபிரபு (51). இவர் மருந்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் தாராபுரம் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 10 பவுன் நகையை திருடினர். இதைக் கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த கயல்விழி என்பவர் அரிவாளுடன் மர்மநபர்களை விரட்டினார்.

இதனால், மர்மநபர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பினர். இதைத்தொடர்ந்து, தடாகம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெண் ஒருவர் அரிவாளுடன் கொள்ளையர்களை துரத்திய சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல, நரசிம்மநாயக்கன்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி (51). இவர், பழவியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் வெளியூர் சென்று விட்டு திரும்பிய நிலையில், வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 11 சவரன் நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, மாயாண்டி அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...