கோவை : கோவை மத்திய சிறையில் மாநகர மத்திய சரக உதவி ஆணையாளர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கூர்மையானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை : கோவை மத்திய சிறையில் மாநகர மத்திய சரக உதவி ஆணையாளர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கூர்மையானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் மாநகர காவல் உதவி ஆணையாளர் சுந்தரராஜன் தலைமையில் ஆய்வாளர், மாநகர போலீஸார் மற்றும் சிறை போலீஸார் என 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை நடத்தினர். மாலை சுமார் 4.30 மணி முதல் 7 மணி வரை இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையானது, சிறை வளாகம் மைதானம் சிறையில் உள்ள அறை என அனைத்துப் பகுதியிலும் நடைபெற்றது.
அதேபோல, சந்தேகத்திற்கிடமான சிறை கைதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிறைவாசிகளில் சிலர் உணவு சாப்பிடும் தட்டை, கத்தி போல் கூர்மையாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஆபத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்களை சோதனையில் ஈடுபட்ட போலீசார் கைப்பற்றினர். மேலும், இந்த கூர்மையான பொருட்கள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை மத்திய சிறை வளாகத்தில் திடீரென காவல்துறையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மத்திய சிறையில் மாநகர காவல் உதவி ஆணையாளர் சுந்தரராஜன் தலைமையில் ஆய்வாளர், மாநகர போலீஸார் மற்றும் சிறை போலீஸார் என 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை நடத்தினர். மாலை சுமார் 4.30 மணி முதல் 7 மணி வரை இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையானது, சிறை வளாகம் மைதானம் சிறையில் உள்ள அறை என அனைத்துப் பகுதியிலும் நடைபெற்றது.
அதேபோல, சந்தேகத்திற்கிடமான சிறை கைதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிறைவாசிகளில் சிலர் உணவு சாப்பிடும் தட்டை, கத்தி போல் கூர்மையாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஆபத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்களை சோதனையில் ஈடுபட்ட போலீசார் கைப்பற்றினர். மேலும், இந்த கூர்மையான பொருட்கள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை மத்திய சிறை வளாகத்தில் திடீரென காவல்துறையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.