இன்று இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பம் : கோவையில் 2,000-ம் போலீசார் குவிப்பு

கோவை : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கோவை மாநகரில் 1,200 போலீசாரும், புறநகர் பகுதிகளில் 800 போலீசாரும் என மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை : புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, கோவை மாநகரில் 1,200 போலீசாரும், புறநகர் பகுதிகளில் 800 போலீசாரும் என மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க மாவட்டம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாநகரில், காவல் ஆணையர் சுமித்சரண் தலைமையின் கீழ் 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, கலைநிகழ்ச்சி நடத்தவும் நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மதுபோதையில் வரும் வாகன ஓட்டுநர்களை பிடிக்கவும், விபத்துகளை தடுக்கவும், 22 இடங்களில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல, புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் மாநகரை அடுத்த பல்வேறு பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையின் கீழ் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...