திருப்பூர் : விளை நிலங்கள் வழியே உயா்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
திருப்பூர் : விளை நிலங்கள் வழியே உயா்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதி்ர்ப்பு தெரிவித்து நடைபெற்று வந்த விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள் இணைந்து கடந்த 17 -ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அடுத்தடுத்து நூதனமான முறையில் தொடர்ந்த இந்த போராட்டம் இன்று 14 -வது நாளாக நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, தூக்குப் போடும் போராட்டம், காய்கறிகளைத் தூக்கிலிட்டு போராட்டம் முதலியவற்றை அடுத்து இன்று விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கி 8 நாட்களாகிறது. ஆனாலும், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எந்த விதமான அழைப்பும் விடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

எனவே, ஜனவரி 3 -ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் காத்திருப்பு மற்றும் பல போராட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ராஜாமணி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் இயக்கத்தலைவர் ராஜாமணி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுக்குப் பழரசம் கொடுத்து உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நிறைவு செய்தார்.
தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட உள்ள விவசாயிகள் இணைந்து கடந்த 17 -ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அடுத்தடுத்து நூதனமான முறையில் தொடர்ந்த இந்த போராட்டம் இன்று 14 -வது நாளாக நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, தூக்குப் போடும் போராட்டம், காய்கறிகளைத் தூக்கிலிட்டு போராட்டம் முதலியவற்றை அடுத்து இன்று விவசாயிகள் மொட்டை அடித்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கி 8 நாட்களாகிறது. ஆனாலும், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எந்த விதமான அழைப்பும் விடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

எனவே, ஜனவரி 3 -ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் காத்திருப்பு மற்றும் பல போராட்டங்களை வாபஸ் பெறுவதாகவும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ராஜாமணி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் இயக்கத்தலைவர் ராஜாமணி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுக்குப் பழரசம் கொடுத்து உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நிறைவு செய்தார்.