கோவை : பொதுமக்கள் சேவையில் சிறந்தது விளங்கியதற்காக முதல் முறையாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பாதுகாப்பு அமைச்சக விருதினை பெற்றுள்ளது.
கோவை : பொதுமக்கள் சேவையில் சிறந்தது விளங்கியதற்காக முதல் முறையாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் பாதுகாப்பு அமைச்சக விருதினை பெற்றுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கன்டோன்மெண்ட் நிர்வாகங்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொது மக்களுக்கான சேவை பிரிவில் சிறந்த விளங்கியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்ட் இயங்குகிறது. இது முதல் முறையாக சிறந்த கன்டோன்மெண்ட்டாக இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அமைச்சக விருது விழா, புதுடெல்லி தேசிய பாதுகாப்புத்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பங்குபெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதினை வழங்கினார்.
இந்த விருதினை கன்டோன்மெண்ட் முதன்மை நிர்வாக அதிகாரி பி.ஹரீஷ் வர்மா, பொறியாளர் சுரேஷ், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், கன்டோன்மெண்ட் துணைத்தலைவர் பாரதியார், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கன்டோன்மெண்ட் ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர்.
மேலும், கணினி உள்ளிட்ட புதிய தொழில் நுட்பம் மூலம் பொதுமக்களுக்கு சேவை புரிந்து சிறப்பாகச் செயல்பட்ட காரணத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கன்டோன்மெண்ட் நிர்வாகங்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொது மக்களுக்கான சேவை பிரிவில் சிறந்த விளங்கியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் போர்ட் இயங்குகிறது. இது முதல் முறையாக சிறந்த கன்டோன்மெண்ட்டாக இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அமைச்சக விருது விழா, புதுடெல்லி தேசிய பாதுகாப்புத்துறை பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பங்குபெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதினை வழங்கினார்.
இந்த விருதினை கன்டோன்மெண்ட் முதன்மை நிர்வாக அதிகாரி பி.ஹரீஷ் வர்மா, பொறியாளர் சுரேஷ், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், கன்டோன்மெண்ட் துணைத்தலைவர் பாரதியார், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் கன்டோன்மெண்ட் ஊழியர்கள் பெற்றுக்கொண்டனர்.
மேலும், கணினி உள்ளிட்ட புதிய தொழில் நுட்பம் மூலம் பொதுமக்களுக்கு சேவை புரிந்து சிறப்பாகச் செயல்பட்ட காரணத்திற்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.