பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி

திண்டுக்கல் : பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

திண்டுக்கல் : பழனியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 

பழனி ஆர்.எப். சாலையில் தொடங்கிய போட்டிகளை டிஎஸ்பி., விவேகானந்தன் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், ஆண்களுக்கு ஆறு கிலோ மீட்டர் தூரமும் போட்டிக்கான தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்போருக்கு வழி நெடுக குடிநீர் வழங்கப்பட்டது. முழு சுற்றை முடிக்கும் வகையில் பாதி தூரத்தில் போட்டியாளர்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. ஆர்.எப்.ரோட்டில் துவங்கிய போட்டிகள் பைபாஸ் ரோடு, திண்டுக்கல் ரோடு வழியாக பேருந்து நிலையம் வந்து நிறைவு பெற்றது. 



போட்டியில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 



போட்டியின் முடிவில் பெண்கள் பிரிவில் பொள்ளாச்சியை சேர்ந்த ரிதன்யஶ்ரீ முதலிடமும், ஆண்கள் பிரிவில் சேலத்தை சேர்ந்த பாலச்சந்திரன் முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டது.


Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...