திருப்பூர் : விளைநிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் : விளைநிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள், போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களில் முதலீட்டினை பெருமளவில் உருவாக்கிடும் வகையில் மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- இம்முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் மூலம் 3,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 520 தொழில் முனைவோர்களிடமிருந்து 2,600 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினரின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரிடம் தமிழக கால்நடை பராமரிப்பு துறைக்கென 940 கோடி திட்டங்களுக்கான தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில், சேலத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்க 360 கோடியும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கால்நடை பராமரிப்பு கட்டிடம், மருத்துவமனை உபகரணங்கள் வாங்க 325 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக பலமுறை அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மின்சாரத்துறை அமைச்சர் அழைத்துள்ளதால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சுமூக உடன்பாட்டிற்கு வர வேண்டும், என்றார்.
மேலும், ஜனவரி 3 ஆம் தேதி விவசாயிகளின் சட்டசபை முற்றுகை போராட்டம் குறித்த கேள்விக்கு, அவர்கள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , திருப்பூர் தொழில்துறையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு சார்பில் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலகங்களில் முதலீட்டினை பெருமளவில் உருவாக்கிடும் வகையில் மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- இம்முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் மூலம் 3,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 520 தொழில் முனைவோர்களிடமிருந்து 2,600 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினரின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரிடம் தமிழக கால்நடை பராமரிப்பு துறைக்கென 940 கோடி திட்டங்களுக்கான தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில், சேலத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்க 360 கோடியும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கால்நடை பராமரிப்பு கட்டிடம், மருத்துவமனை உபகரணங்கள் வாங்க 325 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு நிதி கேட்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக பலமுறை அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மின்சாரத்துறை அமைச்சர் அழைத்துள்ளதால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சுமூக உடன்பாட்டிற்கு வர வேண்டும், என்றார்.
மேலும், ஜனவரி 3 ஆம் தேதி விவசாயிகளின் சட்டசபை முற்றுகை போராட்டம் குறித்த கேள்விக்கு, அவர்கள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , திருப்பூர் தொழில்துறையினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.