கோவை : பணநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மண்டலம் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : பணநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மண்டலம் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மண்டலம் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பணிநிரந்திரம், குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை பவர் ஹவுஸ் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 25-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மண்டலம் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பணிநிரந்திரம், குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை பவர் ஹவுஸ் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 25-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.