கோவை : கோவை மாவட்டம் ஆலந்துரை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கோவை : கோவை மாவட்டம் ஆலந்துரை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆலந்துரையை அடுத்து பெருமாள்கோவில்பதி கிராமம் உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை நேரம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, கால்நடைகளின் கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியது. இதில், கன்றுக் குட்டி ஒன்று உயிரிழந்தது. மற்றொரு கன்று பலத்த காயமடைந்தது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.

இதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த கன்றுவை, அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி மங்கலப்பாளையம் அருகே கூண்டு வைத்து சிறுத்தை ஒன்று பிடிக்கப்பட்டு, தெங்குமரஹடா பகுதி வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆலந்துரையை அடுத்து பெருமாள்கோவில்பதி கிராமம் உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை நேரம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, கால்நடைகளின் கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியது. இதில், கன்றுக் குட்டி ஒன்று உயிரிழந்தது. மற்றொரு கன்று பலத்த காயமடைந்தது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.

இதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த கன்றுவை, அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி மங்கலப்பாளையம் அருகே கூண்டு வைத்து சிறுத்தை ஒன்று பிடிக்கப்பட்டு, தெங்குமரஹடா பகுதி வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.