நீலகிரி : கூடலூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் தங்கி மீன் பிடித்த கேரளாவைச் சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி : கூடலூர் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் தங்கி மீன் பிடித்த கேரளாவைச் சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கடந்த 27-ம் தேதி சிலர் இரவுநேரம் தங்கி மீன் பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தர்மகிரி வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் இருந்து 4 பேர் வருவதைக் கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாகோப், சாகுல், முகமது நசீப், சாகுல் ஆகிய நான்கு பேரும் இங்குள்ள உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில், ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி வலை, டார்ச் விளக்குகள் மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கடந்த 27-ம் தேதி சிலர் இரவுநேரம் தங்கி மீன் பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வனத்துறையினர் நேற்று முன்தினம் அதிகாலையில் தர்மகிரி வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் இருந்து 4 பேர் வருவதைக் கண்ட வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், அவர்கள் நான்கு பேரும் கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாகோப், சாகுல், முகமது நசீப், சாகுல் ஆகிய நான்கு பேரும் இங்குள்ள உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில், ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் மீது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி வலை, டார்ச் விளக்குகள் மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.