கணியூரில் கல்லூரி மாணவிகளின் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் : உடுமலை அருகே கணியூரில் ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில், மரம் வளர்ப்பு மற்றும் மழையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

திருப்பூர் : உடுமலை அருகே கணியூரில் ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில், மரம் வளர்ப்பு மற்றும் மழையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரி சார்பில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மழையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கல்லூரி மாணவிகள் கணியூா் பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக பதாகைகளுடன் பேரணி சென்றனர். 



மரம் வெட்டப்படுவதால் மழை இல்லாமல் விவசாயமும், குடிநீர் தட்டுப்பாட்டால் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவது பற்றியும், மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும் மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும், மாணவிகள் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர். 



இந்தப் பேரணியை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...