திருப்பூர் : திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி, மூன்று நாட்களுக்குப் பின்னர் உடல் மீட்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி, மூன்று நாட்களுக்குப் பின்னர் உடல் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி கொல்லி மாத்திரையை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. கடந்த 3 நாட்களாக ராமசாமியைக் காணாத நிலையில், இன்று பூச்சி கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி கொல்லி மாத்திரையை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. கடந்த 3 நாட்களாக ராமசாமியைக் காணாத நிலையில், இன்று பூச்சி கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.