செல்வபுரம் அருகே சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது

கோவை : செல்வபுரம் அருகே சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

கோவை : செல்வபுரம் அருகே சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். 

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கோவை மாநகர பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாகவே திடீர் திடீரென உடல் பாதிப்புகளுக்குள்ளாகி வந்தார். மேலும், தீராத வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தனர். அப்போது, அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. 

அந்த சிறுமியின் சகோதரர் வகையிலான உறவினர் அஸ்வின் (18) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீஸார், அஸ்வின் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் (போக்ஸோ) 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்த அவர், போலீஸார் தேடுவதை அறிந்து தலைமறைவானார். 

இந்த நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அஸ்வினை செல்வபுரம் போலீஸார் கைது செய்து, ஜே.எம்.5-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...