சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் : பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை : இரு பெண்களுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : இரு பெண்களுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு தலைமை செயற்குழு கூட்டம் கோவை வரதராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :- கோவையில் நடக்கும் பா.ம.க.,வின் செயற்குழு, பொதுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய பிரச்சனைகள் குறித்து தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை மற்றும் சாத்தூரைச் சேர்ந்த இரு பெண்மணிகளுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவாகரத்தில் தமிழகத்தில் சுகாதாரத்துறை சரியாக செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒரு மருத்துவராக தான் கூற விரும்புவது எச்.ஐ.வி. ரத்தம் வழங்கியது மிகப் பெரிய தவறு. அதனை ஏற்க முடியாது.

என்.எல்.சி. விரிவாக்கத்திற்கு தடை செய்ய வேண்டும். அந்தப் பகுதி பாலைவனமாக்க விடக் கூடாது. உயர்மின் கோபுரம் விவகாரத்தில் விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். அதேபோல, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். 

ஸ்டெர்லைட் ஆலை சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறது. தமிழக அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது.

ஸ்டெர்லைட் விவாகரத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிட வேண்டும். டாஸ்மாக் பிரச்சினைக்கு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிடவில்லை. ஜனவரியில் சட்டமன்றம் கூட இருப்பதால் காவிரி, டெல்டாவைக் பாதுகாக்க ஒரு சட்டம் இயற்றி, அதற்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வருவது தேவையில்லாதது. அதனால் நமக்கு பாதகங்கள் தான் அதிகம், இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், அரசியலுக்கு வருவோம் என்று சொன்னால் மட்டும் போதாது, வந்தால் பார்ப்போம், வரட்டும் அவர்களுக்கு பதில் சொல்லலாம், எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...