கோவை ரயில்நிலையம் ரவுண்டான சாலையில் முறையற்ற பார்க்கிங் : திரும்ப முடியாமல் தவிக்கும் பேருந்துகள்

கோவை : கோவை ரயில்நிலையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டானாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் பேருந்துகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றன.

கோவை : கோவை ரயில்நிலையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டானாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் பேருந்துகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றன.



கோவை ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள ரவுண்டாவில் திரும்பி கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிலையங்களுக்கு செல்கின்றன. அதன்பின் அங்கிருந்து உக்கடம், டவுன்ஹால், பூமார்க்கெட், சாய்பாபா காலனி, புதிய பேருந்து நிலையம், துடியலூர், பிரஸ்காலனி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றன.



இதனிடையே. அச்சாலையில் முறையற்ற பார்க்கிங் காரணமாக பேருந்துகள் திரும்ப முடியாமல் தவிக்கின்றன. அதே சமயம், மற்ற வாகனங்களும் அச்சாலையில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகின்றன. இதனால், பயணிகளின், நடைபாதையில் செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பார்க்கிங் வசதியை மேம்படுத்தி பேருந்துகள் திரும்பவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...