நீலகிரியில் சாரல் மழையும், கடும் குளிரும் நிலவுவதால் வெறிச்சோடி காணப்படும் சுற்றுலாப் பகுதிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையும், கடுமையான குளிரின் காரணமாக, அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையும், கடுமையான குளிரின் காரணமாக, அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. 



உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் அடர்ந்த மேக மூட்டம் காணப்படுவதுடன், சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்யும் சாரல் மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடும் குளிரை சுற்றுலாப் பயணிகள் ரசித்து அனுபவித்தாலும், மேகமூட்டத்தால் இயற்கை காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



கடும் குளிரும் நிலவி வருவதால் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, கோடநாடு, லேம்ஸ்ராக், டால்பினோஸ் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விடுமுறை நாட்கள் என்றாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தே காணப்பட்டது. சுற்றுலா வந்தவர்களில் பலரும் காலை சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...