கோவை : 10 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழரை விடுவிக்கக் கோரி கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.
கோவை : 10 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழரை விடுவிக்கக் கோரி கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகள் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவையில் பேரணி நடைபெற்றது. கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகம் வரை வந்தது. அதன் பின்னர் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது இசுலாமிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அளித்த உறுதியை நிறைவேற்ற வேண்டும் என பேரணி மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகள் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவையில் பேரணி நடைபெற்றது. கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகம் வரை வந்தது. அதன் பின்னர் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது இசுலாமிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அளித்த உறுதியை நிறைவேற்ற வேண்டும் என பேரணி மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
