குறைகேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் விவசாயிகள்

திருப்பூர் : விவசாய நிலம் வழியே மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : விவசாய நிலம் வழியே மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், புதை வடமாக மின் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் விவசாயிகள் 12 -வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 விவசாயிகள் 6 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்தும் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த கூட்டத்தில், விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள், இதுவரை மாவட்ட நிர்வாகம் அவர்களின் பிரச்சினையை கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர். இதையடுத்து, விவசாயிகள் அனைவரும் இணைந்து குறைதீர்ப்பு கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர். மேலும், ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...