ஈஷா தொடுத்த அவதூறு வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணை : சமூக ஆர்வலர் பியூஷ் ஆஜர்

கோவை : கோவை, ஈஷா யோக மையம் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை : கோவை, ஈஷா யோக மையம் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியுஷ் மானுஷ். இவர் கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தின் மீது நில அபகரிப்பு, வனப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுதல், சமூக ஆர்வலர் ராஜேஷ்குமாரின் மர்ம மரணத்தில் தொடர்பு என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முகநூல் மூலமாகப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பியூஷ் மீது ஈஷா யோக மையம் சார்பில் கோவை நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டது. 



இதையடுத்து, இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற நிலையில், பியூஷ் மானுஷ் கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்நிலையில், இந்த வழக்கை வருகிற பிப்ரவரி 1 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பியூஷ் பேசினார். 

அவர் கூறுகையில், "என் மீது வழக்கு போட்டுள்ள ஈஷா மையம், வனப்பகுதியில் யானை வாழ்விடத்தில் கட்டிடங்கள் கட்டியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. எனவே, இந்த வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு வரும்," என்றார். 

"ஈஷா குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்கிற நோக்கில் பியூஷ் பதிவிட்டுள்ளதால் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பியூஷிற்கு 2 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனைப் படைத்ததற்கான ஆவணங்கள் எங்கள் தரப்பில் உள்ளது. 



மேலும், ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்த 'ரேளி பார் ரிவ்ர்ஸ்' பேரணி மூலம் ஆறுகளின் கரைகள் ஆக்கிரமிக்கப்படுவதாகக் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை," என ஈஷா தரப்பு வழக்கறிஞர் மகேஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...