நீலகிரி : உதகையில் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா கோடை சீசனுக்கு தயாராகி வருகிறது.
நீலகிரி : உதகையில் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா கோடை சீசனுக்கு தயாராகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க, இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க என ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதில் தாவரவியல் பூங்கா, தொட்டப்பெட்டா, பைக்காரா, , உதகை படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், உதகை மலை ரயில் குன்னுார் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சிமுனை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா ஸ்தலங்களைப் பராமரிப்பதும் அடங்கும்.

இந்த ஸ்தலங்களைக் காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா மாநில தோட்டக்கலைத்துறை சார்பில், கடந்த ஜனவரி மாதம் 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்கா திறக்கப்பட்டது.
இந்த பூங்கா புல் வெளிகள், மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகை, என பல்வேறு அம்சங்களை உடையது. தற்போது எதிர் வரும் கோடை சீசனுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும், பார்வையாளர்களை வசீகரிக்கும் வண்ணமாக உயர்ரக மலர் நாற்றுகள், பல வண்ணங்களில் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.