குன்னூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் 52-வது மண்டல பூஜை : பக்தர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம்

நீலகிரி : குன்னூர் ஐயப்ப சுவாமி திருக்கோயிலின் 52-வது மண்டல பூஜையையொட்டி, பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாகச் சென்று ஐயப்பனை வழிபட்டனர்.

நீலகிரி : குன்னூர் ஐயப்ப சுவாமி திருக்கோயிலின் 52-வது மண்டல பூஜையையொட்டி, பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாகச் சென்று ஐயப்பனை வழிபட்டனர்.



குன்னூர் ஐயப்பன் கோவிலில் 52-வது ஆண்டு மண்டல பூஜை திருவிழா, அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை, உஷ பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையை கோவில் ஸ்தாபகர் சங்கர் சுவாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அதில், பகவதி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. உச்சிகால பூஜையை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



காலை விநாயகர் கோவிலில் இருந்து அபிஷேகப் பொருட்களுடன், தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது. பின்னர், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு திருவீதி உலா ஐயப்பன் கோவிலில் இருந்து தொடங்கி, குன்னுார், ஊட்டி சாலை, டி.டி.கே சாலை, வி.பி.தெரு, மார்க்கெட்டி பகுதி, மவுண்ட் ரோடு, பெட்போர்டு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விளக்குகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். 

புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி மற்றும் எர்ணாகுளம் சிந்து பாட்டு குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், காளி, அனுமான், சிவன், அன்னலட்சுமி ஆகிய கடவுள்களைப் போல வேடமணிந்து நடனமாடினர். இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...